

திருச்செந்தூர்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு-2 (குரூப்-2) பதவிக்கான எழுத்து தேர்வு 6.8.2017 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் 26.5.2017-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி ஆகும். இத்தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் ஜூலை மாதம் 5-ந் தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்புகள்
இந்த பயிற்சி வகுப்பில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் தமிழ்மொழி வாயிலாக மட்டும் பயிற்சி அளிக்கப்படும். இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.7 ஆயிரம் ஆகும். பயிற்சி வகுப்புகள் நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.7 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல்நாள் 1.6.2017 அன்று நேரில் செலுத்த வேண்டும்.
பயிற்சி வகுப்பில் சேர...
பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் புகைப்படம் ஒட்டி பெயர், முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் மற்றும் விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.7 ஆயிரத்துக்கான டிமாண்ட் டிராப்ட் (டி.டி) (கனரா வங்கி, ஐ.ஓ.பி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு 23.5.2017-க்குள் அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் மற்றும் விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.
இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்கள் பெற, 04639-242998, 9442055243, 8682985148 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.