டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு: சரண் அடைந்த 4 பேருக்கு போலீஸ் காவல் - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் சரண் அடைந்த 4 பேரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு எழும்பூர் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு: சரண் அடைந்த 4 பேருக்கு போலீஸ் காவல் - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முறைகேடு வழக்கில் 46 பேரை சி.பி.சி. ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை கொளத்தூரை சேர்ந்த கார்த்திகேயன், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சம்பத் ஆகிய 2 பேரும் கடந்த 7-ந்தேதி ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த தமிழ் ஆசிரியர் செல்வேந்திரன் சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டிலும், கொளத்தூரை சேர்ந்த கார் டிரைவர் பிரபாகரன் எழும்பூர் கோர்ட்டிலும் கடந்த 14-ந்தேதி சரண் அடைந்தனர்.

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் 4 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி கேட்டு எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. கோர்ட்டில், போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதில் அவர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.

குரூப்-2 ஏ முறைகேடு வழக்கு தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம் காந்தனுக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை கோர்ட்டு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம், கீழக்கரை ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கைது நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com