ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களின் தரத்தை உறுதி செய்ய-கலெக்டர் உத்தரவு

ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.
ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களின் தரத்தை உறுதி செய்ய-கலெக்டர் உத்தரவு
Published on

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர பொது வினியோக திட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி கூறியதாவது:- பொது வினியோக திட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு வரும் உணவு பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக புகார் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். விரைவாக பொருட்களை கொடுத்து அனுப்ப வேண்டும். அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்குவதை வட்ட வழங்கல் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், போதிய அளவு அத்தியாவசிய பொருட்களின் இருப்புகளை கண்டறிய வேண்டும். வெளிசந்தைகளுக்கு பொருட்களை கடத்துவதை தவிர்க்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மின்னணு குடும்ப அட்டைகளை தவற விட்டவர்கள் மற்றும் சேதம் அடைந்தவர்களுக்கு உடனடியாக நகல் குடும்ப அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வட்ட அளவிலான வழங்கல் அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு உணவுப்பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com