மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க ரூ. 4.5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருந்திய ஸ்கூட்டர் வழங்க ரூ 4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க ரூ. 4.5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
Published on

சென்னை,

மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஸ்கூட்டர் வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்க ரூ.4.50 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதனோடு பயனாளர்களைத் தேர்வு செய்வதற்கான நிபந்தனைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் தவிர ஏனைய இருசக்கர வாகனங்களை இயக்க இல்லாதவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் விபத்து மற்றும் இதர காரணங்களால் 60 சதவிகிதத்திற்கும் மேல் ஒருகால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் போலியோவால் ஒருகால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com