சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வா? - வைகோ கண்டனம்

முதுநிலை சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வா? - வைகோ கண்டனம்
Published on

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு நீட் புகுத்தப்பட்டு, கிராமப்புற மாணவர்கள், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் மருத்துவ கனவை கானல் நீராக்கிய மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது சட்டக்கல்வியிலும் சமூக நீதியை ஒழிக்க முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.

முதுகலை சட்டப்படிப்புக்கு இனிமேல் அகில இந்திய நுழைவுத்தேர்வு நடத்தப்படும். முதுநிலை சட்டப்படிப்பு எல்.எல்.எம். என்பது 2 ஆண்டு படிப்பாக்கி, ஓராண்டு படிப்பு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் அறிவித்திருக்கிறது.

ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்கள் சட்டம் பயின்று, முதுநிலை சட்ட மேற்படிப்பு பயில்வதை முற்றிலுமாக தடை செய்திடும் வகையில் உள்நோக்கத்தோடு இந்திய பார் கவுன்சில் அறிவிப்புகளைச் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பா.ஜ.க. அரசு, முதுநிலை சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்திய பார் கவுன்சில் தனது அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com