வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஜெயந்தி விழா

வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஜெயந்தி விழா இன்று நடைபெற உள்ளது.
வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஜெயந்தி விழா
Published on

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்திற்கு அருகேயுள்ள பெருமாள் மலை அடிவாரத்தில் ஸ்ரீ பூமலை சஞ்சீவிராயர் மற்றும் வழித்துணை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவதுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com