சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் நாளை முதல் தண்ணீர் திறப்பு ; முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்ததுள்ளா. #Edappadipalaniswami
சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் நாளை முதல் தண்ணீர் திறப்பு ; முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
Published on

மதுரை,

மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா கடந்த 18ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் அருள்மிகு கள்ளழகர் 30 ஆம் தேதி காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் எழுந்தருளுகிறார்.

இந்த சித்திரை விழாவை முன்னிட்டு வைகையாற்றில் 27ம் தேதி (நாளை) முதல் 30 ஆம் தேதி வரையிலும் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்ததுள்ளா.

இந்நிலையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு சுமா 216 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளா.

X

Daily Thanthi
www.dailythanthi.com