விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு
Published on

சென்னை,

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. இதற்கு காரணமான அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பணி இடைநீக்க நடவடிக்கையும் அவர் மீது பாய்ந்தது. அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தற்போது இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு பற்றி ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதா தலைமையிலான உயர் மட்ட குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. அந்த உயர் மட்ட குழுவினர், இது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும், என்று சிபாரிசு செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com