வாலிபரை கடத்தி சென்று அடித்து சித்ரவதை

வாலிபரை கடத்தி சென்று அடித்து சித்ரவதை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலிபரை கடத்தி சென்று அடித்து சித்ரவதை
Published on

தேவகோட்டை, 

தேவகோட்டை நடராஜபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் பிரபு (வயது 20). அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் பிரவீன் (24). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவர் ஒலிபெருக்கி நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் பிரபு வேலை செய்து வந்தார்.

தங்களுக்கும், முத்துவுக்கும் முன் விரோதம் உள்ளது. எனவே, நீ அங்கு வேலை செய்யக்கூடாது என பிரபுவை, பிரவீன் மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் இதை பொருட்படுத்தாது பிரபு வேலைக்கு சென்று வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் தனது நண்பர்கள் சாய்புவனேஷ், பாலமுருகன் ஆகியோருடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு பிரபுவை கடத்தி சென்றனர்.

அங்கு அவரை அடித்து சித்ரவதை செய்து படுகாயப்படுத்தினர். இதில் காயமடைந்த பிரபு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து பிரவீன், சாய்புவனேஷ், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com