குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
Published on

தென்காசி,

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலங்களில் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்வார்கள்.

இந்த ஆண்டுக்கான சீசன் காலம் முடிந்த பிறகும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.

மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நேற்று மதியம் 2 மணி அளவில் மெயின் அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அருவியில் நேற்று முன்தினமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய அவர்கள் மற்ற அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள என போலீசார் தெரிவித்தனர்.

அதன்படி, குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி அருவியின் ஒரு பகுதியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருவியில் ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று குளித்துச் செல்கின்றனர். விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com