மாநில அளவிலான செஸ் போட்டி

மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது.
மாநில அளவிலான செஸ் போட்டி
Published on

கரூரில் மாநில அளவிலான செஸ் போட்டி நேற்று காலை நடைபெற்றது. இந்த போட்டியை கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். 9, 11, 13, 20 வயதுக்குட்பட்டவர்கள் என மொத்தம் 4 பிரிவுகளாக நடந்தது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் கரூர் உளபட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com