மணலுடன் டிராக்டர் பறிமுதல்

மணலுடன் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
மணலுடன் டிராக்டர் பறிமுதல்
Published on

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு தலைமையிலான போலீசார் இளமனூர் அம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் டிராக்டரில் அரசு அனுமதி இன்றி மணல் அள்ளி கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் ஒரு யூனிட் மணலுடன் அந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரமலான் நகர் பகுதியை சேர்ந்த பகுருதீன், காஜா முஹைதீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com