ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

சிங்கபெருமாள்கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு, தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் நிறுவன ஊழியர் ரெயில் மோதி பலியானார்.
ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

தாம்பரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மறைமலை நகர்-சிங்கபெருமாள் கோவில் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, புதுச்சேரி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்தார். இதேபோல், செம்பாக்கம் ஹெரிடேஜ் காந்தி நகர், 9-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விஷ்ணு (30). இவர் கடைக்கு செல்ல குரோம்பேட்டை-தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது, கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் அடிபட்டு பலியானார்.

3 பேர் பலி

அதேபோல், மறைமலை நகர்-சிங்கபெருமாள் கோவில் இடையே, தண்டவாளத்தை கடக்க முயன்ற, 55 வயது மதிக்கத்தக்க நபர், அவ்வழியாக சென்ற, மின்சார ரெயில் மோதி பலியானார்.

கிண்டி-செங்கல்பட்டு ரெயில்வே மார்க்கத்தில் 3 பேர் ரெயிலில் அடிபட்டு பலியான சம்பவங்கள் குறித்து, தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com