கோழி பண்ணையாளர்களுக்கு பயிற்சி முகாம்

நாமக்கல்லில் கோழி பண்ணையாளர்களுக்கு பயிற்சி முகாம் 12-ந் தேதி நடக்கிறது.
கோழி பண்ணையாளர்களுக்கு பயிற்சி முகாம்
Published on

நாமக்கல்லில் உள்ள கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் - திருச்சி சாலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கோழிகளுக்கான மரபுசார் மூலிகை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருகிற 12-ந் தேதி லாபகரமான கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு என்கிற தலைப்பில் பண்ணையாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் அன்று காலை 11 மணி அளவில் தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com