

கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி மற்றும் போலீஸ் கமிஷனர் சுமித்சரண் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் மீது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, தேர்தல் அல்லாத பணிகளுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட கலெக்டராக எஸ்.நாகராஜன் மற்றும் போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.