தமிழகத்தில் 3-வது நாளாக தொடரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

உதயநிதி துணை முதல்வராக இருந்த போது அவரது செயலாராக இருந்த பிரதீப் யாதவ் ஐடி துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 3-வது நாளாக தொடரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Published on

சென்னை,

தமிழக முதல் அமைச்சரக விஜய் பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக முக்கிய துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

*உதயநிதி துணை முதல்வராக இருந்த போது அவரது செயலாராக இருந்த பிரதீப் யாதவ் ஐடி துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

*கரூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் நியமனம்

*மீன் வளத்துறை இயக்குநர் முரளிதரன், வேளாண் துறை இயக்குநராக இடமாற்றம்

*திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியராக அப்துல் ரசாக் நியமனம்

*மாநில மனித உரிமை ஆணையராக முருகேஷ் நியமனம்

*வேளாண் துறை இயக்குநராக முரளிதரன் நியமனம்

*ஸ்ரீபெரும்பதூர் துணை ஆட்சியராக நல்லசிவன் நியமனம்

*கைத்தறி முதன்மை செயலாளராக டி.என்.வெங்கடேஷ் நியமனம்

*வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலாராக பி.சங்கர் நியமனம்

*காயத்ரி கிருஷ்ணன் - சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம்

*லதா - கூட்டுறவுத்துறை ஆணையராக நியமனம்

X

Daily Thanthi
www.dailythanthi.com