போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

நெல்லை சரகத்தில் குற்றாலம் உள்பட பல்வேறு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
Published on

நெல்லை சரகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதாவது அம்பை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமாபத்மினி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சேரன்மாதேவி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திற்கும், கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர்பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் கோமதி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், காந்திமதி, பனவடலிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கும், பெருமாள் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கும், ராஜகுமாரி குற்றாலம் போலீஸ் நிலையத்திற்கும், கோகிலா கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான உத்தரவை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com