திருச்சி- சார்லபள்ளி சிறப்பு ரெயில் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிப்பு

ரெயில் சேவை ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி- சார்லபள்ளி சிறப்பு ரெயில் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிப்பு
Published on

திருச்சி,

திருச்சியில் இருந்து ஆந்திர மாநிலம் சார்லபள்ளிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 07616) வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமைகளில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் வாரத்தில் 1 ஒரு நாள் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் சார்லபள்ளி -திருச்சி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07615) சேவை ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் மாதம் 2-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரெயில்கள் ஏசி இரண்டடுக்கு பெட்டிகள் 3, ஏசி மூன்றடுக்கு பெட்டிகள் 5, தூங்கும் வசதி பெட்டிகள் 10, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் 4 உடன் இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com