திருச்சி -சார்லபள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் நிரந்தரமாக இயக்கம்

நேற்று முதல் நிரந்தர வாராந்திர சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டது.
திருச்சி -சார்லபள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் நிரந்தரமாக இயக்கம்
Published on

ஸ்ரீரங்கம்,

திருச்சி -சார்லபள்ளி (ஐதராபாத்) சிறப்பு வாராந்திர ரெயில் தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலை நிரந்தர வாராந்திர சிறப்பு ரெயிலாக இயக்க வலியுறுத்தி துரை வைகோ எம்.பி. ரெயில்வே மந்திரி, திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளருக்கு கடிதம் எழுதினார்.

இதனையடுத்து அந்த ரெயில் நேற்று முதல் நிரந்தர வாராந்திர சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டது. அந்த ரெயிலுக்கு நேற்று மாலையில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் துரை வைகோ எம்.பி. வரவேற்பு அளித்தார். மேலும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com