திருச்சி-சிங்கப்பூர் விமான சேவை அதிகரிப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தின் திருச்சி-சிங்கப்பூர் விமான சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி-சிங்கப்பூர் விமான சேவை அதிகரிப்பு
Published on

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத் தின் சார்பில் துபாய், மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன் உள்ளிட்ட நாடு களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் சிங்கப்பூருக்கு ஒரு விமானமே இயக்கப்பட்டு வந்தது.

தற்போது, பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து வாரத்திற்கு 10 விமான சேவைகள் இயக்கப்பட உள்ளது என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com