லாரி-சரக்கு வேன் மோதல்; தந்தை பலி

அன்னவாசல் அருகே லாரி-சரக்கு வேன் மோதியதில் தந்தை பலியானார். மகன் படுகாயமடைந்தார்.
லாரி-சரக்கு வேன் மோதல்; தந்தை பலி
Published on

தந்தை பலி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 55). வியாபாரி. இவரது மகன் சோலை (27). இவர்கள் இருவரும் ஒரு சரக்கு வேனில் புதுக்கோட்டை- பொன்னமராவதி சாலையில் குமரமலை என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.

சரக்கு வேனை சோலை ஓட்டினார். குமரமலை திருவள்ளுவர் நகர் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரியும், சரக்கு வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சோலை படுகாயம் அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த சோலையை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தியாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com