டி.வி. விழுந்து 3 வயது குழந்தை சாவு

சங்கராபுரம் அருகே டி.வி.விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
டி.வி. விழுந்து 3 வயது குழந்தை சாவு
Published on

சங்கராபுரம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூவரசன். இவரது மகன் மகியரசன் (வயது 3). இவன் சம்பவத்தன்று வீட்டில் உள்ள டி.வி.ஸ்டாண்டில் ஏற முயன்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக டி.வி.சரிந்து மகியரசன் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவன் வலியால் அலறி துடித்தான்.

இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனே மகியரசனை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

போலீசார் விசாரணை

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை மகியரசன் பரிதாபமாக இறந்தான். இதையறிந்த குழந்தையின் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து குழந்தையின் தாய் செல்லக்கிளி அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com