234 தொகுதிகளிலும் மார்ச் 1ல் த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டம்: என்.ஆனந்த் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணி முதல், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.
234 தொகுதிகளிலும் மார்ச் 1ல் த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டம்: என்.ஆனந்த் அறிவிப்பு
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் 1ம் தேதி (1.3.2026) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணி முதல், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகச் செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது.

தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com