ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்

விஜய் தலைமையிலான தவெக அரசு அமைய உள்ளது.
ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், சட்டசபையில் தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும்.

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் என்ற சூழ்நிலையில் தவெகவுக்கு 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனாலும், பெரும்பான்மைக்கு இன்னும் இடங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்டு(2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் தவெகவுக்கு 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் விஜய் தலைமையிலான அரசு அமைய உள்ளது.

இதையடுத்து, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தவெக தலைவர் விஜய் இன்று சென்றார். அவர் தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தவெக அரசு அமைய 120 எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆதரவு கடிதத்தை பொறுப்பு கவர்னரிடம் விஜய் அளித்தார். மேலும், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவும் கவர்னரிடம் தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார்.

பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் சந்தித்தபோது அவருடன் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகளின் தலைவர்களும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com