தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று த.வெ.க. ஆர்ப்பாட்டம்

மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் த.வெ.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று த.வெ.க. ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு முடிவுகட்ட வேண்டும், போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் த.வெ.க. சார்பில் இன்று (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முன்னதாக இது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தெரிவித்திருந்ததாவது;-

கழகத் தோழர்களுக்கு வணக்கம். விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.

அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.

இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், 12ஆம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகளும் தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com