மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி

கலசபாக்கம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி
Published on

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நேருக்கு நேர் மோதல்

கலசபாக்கம் அருகே சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்நாதன் (வயது 42). இவர் தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு சொந்த வேலை காரணமாக சோழவரத்தில் இருந்து அருகே உள்ள எர்ணாமங்கலம் கிராமத்திற்கு நேற்று இரவு சென்றார்.

அவருடன் அவரது மாமா சுப்பிரமணி (76) என்பவரும் சென்றார்.

அப்போது பூவாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது மனைவி பழனியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் வானம்பட்டு கிராமத்திலிருந்து பூவாம்பட்டு செல்வதற்காக சோழபுரம் நோக்கி மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.

சோழவரம் கூட்ரோடு அருகில் உள்ள ராதாகிருஷ்ணன் என்பவரின் நிலத்தின் அருகில் எதிர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் எதிர்பாராத விதமாக மோதியது.

2 பேர் பலி

இதில் அருள்நாதன் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுப்பிரமணி படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ராஜ்குமார், அவரது மனைவி பழனியம்மாள் ஆகிய இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com