உதயநிதி ஸ்டாலின் அவதூறு கூறி வருகிறார்: திண்டுக்கல் சீனிவாசன்

எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறு கூறி வருகிறார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் அவதூறு கூறி வருகிறார்: திண்டுக்கல் சீனிவாசன்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்வெட்டால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதேபோன்று ரேஷன் கடைகளில் சரிவர பொருட்கள் வழங்குவதில்லை. அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தேர்வு பெற்றது குறித்து, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசுகிறார்.

பெரியவர்கள் மற்றும் கடவுள் முன்பு விழுந்து வணங்குவது இயல்பு என்பதுகூட தெரியாமல், அதனை மோசமான செயல் என அவர் பேசிவருகிறார். அவருடைய தாத்தா கருணாநிதி, எம்.ஜி.ஆரிடம் இருந்து தட்டிப்பறித்து முதல்-அமைச்சர் ஆனார் என்ற வரலாறு தெரியாமல் பேசுகிறார். கடந்த தேர்தலில் திமுக முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதிக ஓட்டுகளை பெற்றது. திமுக வாக்குவங்கி, அதிமுகவை விட குறைவாகவே பெற்று உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com