

மேட்டூர்:
மேட்டூர் அனல் மின் நிலைய 4 ரோடு அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சாலையோரத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்து வந்த மேட்டூர் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.