கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம்: அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம்: அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு
Published on

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விரிவான ஆய்விற்குப் பின் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் வழங்கலில் உள்ள இடர்பாடுகளை போர்க்கால அடிப்படையில் களைந்து, லாரிகளின் மூலமாகவும், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், மாற்று ஏற்பாடுகள் செய்தும் சீரான குடிநீர் விநியோகம் செய்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.

அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் திங்கட்கிழமைதோறும் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். மேலும் எதிர்வரும் மழைக்காலத்தினை கருத்தில் கொண்டு, தூர்வாரும் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தி காலதாமதமின்றி தொடங்க பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com