துப்புரவு பணியாளர்களுடன் உணவருந்திய மத்திய மந்திரி எல்.முருகன்

மத்திய மந்திரி எல்.முருகன் 3 நாள் பயணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்றார்.
Published on

சென்னை:

மத்திய மந்திரி எல்.முருகன் நிகோபாரில் உள்ள ஜங்லிகாட் துறைமுகத்தை பார்வையிட்டார். அப்போது ஆழ்கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கும் இடங்களை கண்டறியும் படகை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ஹாவ்லாக், கார் நிகோபார் தீவுகளில் 100 வாட் திறன் கொண்ட 2 பண்பலை வானொலி ஒலிபரப்பு நிலையம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதன்பின்பு போர்ட் பிளேர் புருஷா பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் துப்புரவு பணியாளர்களுடன் மதிய உணவு அருந்தினார். மேலும் போர்ட் பிளேரில் உள்ள செல்லுலார் சிறைச்சாலையை பார்வையிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com