நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 38 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 38 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை மாநில தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 38 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
Published on

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ந் தேதி நடக்கிறது. தேர்தல் விதி மீறல், பண பட்டுவாடா போன்றவற்றை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டம் தோறும் ஐ.ஏ.எஸ். அந்தஸ்திலான தேர்தல் பார்வையாளர்களை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள் விவரம் வருமாறு:-

அரியலூர்-எம்.என்.பூங்கொடி, செங்கல்பட்டு-மகேஸ்வரி ரவிக்குமார், சென்னை மாநகராட்சி (1 முதல் 5 மண்டலங்கள்) - டி.மணிகண்டன், சென்னை மாநகராட்சி (6 முதல் 10 மண்டலங்கள்) -ஏ.ஜான் லூயிஸ், சென்னை மாநகராட்சி (11 முதல் 15 மண்டலங்கள்) -வி.தட்சிணாமூர்த்தி.

கோவை-மதுரை

கோவை-மரியம் பல்லவி பல்தேவ், கடலூர்-வி.சிவகிருஷ்ண மூர்த்தி, தர்மபுரி-ஆர்.பிருந்தாதேவி, திண்டுக்கல்-ஜெசிந்தா லாசரஸ், ஈரோடு-நிஷாந்த் கிருஷ்ணா, கள்ளக்குறிச்சி- ஐ.எஸ்.மெர்சி ரம்யா, காஞ்சீபுரம்- கே.கற்பகம், கன்னியாகுமாரி- எல்.மதுபாலன்.

கரூர்-கே.சாந்தி, கிருஷ்ணகிரி- வந்தனா கார்க், மதுரை- கமல் கிஷோர், மயிலாடுதுறை- விஜயேந்திர பாண்டியன், நாகப்பட்டினம்- கே.ஜெ.பிரவீன்குமார், நாமக்கல்- ஜெ.இன்னசென்ட் திவ்யா, பெரம்பலூர்- டி.ரத்னா, புதுக்கோட்டை- டாக்டர் மோனிகா ராணா.

நெல்லை- தஞ்சாவூர்

ராமநாதபுரம்- அஜய் யாதவ், ராணிப்பேட்டை- எஸ்.வளர்மதி, சேலம்- ஏ.அண்ணாத்துரை, சிவகங்கை- எம்.தங்கவேல், தென்காசி- எச்.எஸ்.ஸ்ரீகாந்த், தஞ்சாவூர்- ஆர்.வைத்திநாதன், நீலகிரி- ஏ.ஆர்.கிளாட்சன் புஷ்பராஜ், தேனி-ஏ.சங்கர்.

தூத்துக்குடி-டாக்டர் அதுல் ஆனந்த், திருச்சி- கலைச்செல்வி மோகன், நெல்லை-டாக்டர் சி.என்.மகேஸ்வரன், திருப்பத்தூர்- எம்.பிரதீப்குமார், திருப்பூர்-எல்.நிர்மல்ராஜ், திருவள்ளூர்-பி.கணேசன், திருவண்ணாமலை- எம்.எஸ்.சங்கீதா, திருவாரூர்- ஆனந்த் மோகன், வேலூர்-எம்.பிரதாப், விழுப்புரம்- எம்.லட்சுமி, விருதுநகர்-எஸ்.பாலசந்தர்.

செல்போன் எண்கள்

தேர்தல் பார்வையாளர்கள் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான 4-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் கண்காணிப்பு பணியை தொடங்குவார்கள் என்றும், தேர்தல் பார்வையாளர்களின் செல்போன் எண்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் வெளியிடப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com