திருப்பத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. பதவியேற்க தடை கேட்டு அவசர வழக்கு: இன்று விசாரணை

திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் பெரியகருப்பன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
திருப்பத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. பதவியேற்க தடை கேட்டு அவசர வழக்கு: இன்று விசாரணை
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இந்த தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் பெரியகருப்பன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதாவது பெரிய கருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்ற அவசர வழக்கை சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் எஸ்.விக்டோரியா கவுரி, என்.செந்தில்குமார் ஆகியோர் அவசர வழக்காக விசாரிக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com