3 பெருமாள் கோவில்களில் உறியடி உற்சவம்

கும்பகோணத்தில் உள்ள 3 பெருமாள் கோவில்களில் உறியடி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3 பெருமாள் கோவில்களில் உறியடி உற்சவம்
Published on

கும்பகோணம்:

கும்பகோணத்தில் உள்ள 3 பெருமாள் கோவில்களில் உறியடி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உறியடி உற்சவம்

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி, சக்கரபாணி சாமி, சாரங்கபாணி சாமி ஆகிய 3 பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி உறியடி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு விழா, 3 பெருமாள் கோவில்களிலும் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 7-ந் தேதி உறியில் பானைக்கட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் இரவு உறியடி உற்சவமும் நடந்தது.

சிறப்பு அலங்காரம்

முன்னதாக ராமசாமி கோவில் எதிரே ராமர், சக்கரபாணி சாமி கோவில் எதிரே சக்கரபாணி, சாரங்கபாணி சாமி கோவில் முன்பு சாரங்கபாணி சாமி ஆகிய 3 உற்சவர்களும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பின்னர், அந்தந்த கோவில்களின் எதிரே கட்டி தொங்கவிடப்பட்டிருந்த உறி பானையை அடித்து உடைத்தனர்.இதனைத் தொடர்ந்து, 3 கோவில்களிலிருந்து உற்சவர்கள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்கள் சிவசங்கரி, சி.மகேந்திரன் மற்றும் கும்பகோணம் வர்த்தக சங்கத் தலைவர் கே.எஸ்.சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com