வைகாசி விசாக பெருவிழா

ஆரணி கோவில்களில் வைகாசி விசாக பெருவிழா நடந்தது.
வைகாசி விசாக பெருவிழா
Published on

ஆரணி

ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெருந்தேவி தாயார் கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா நடந்தது.

இதையொட்டி அதிகாலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து உற்சவர் பெருமாளை கருட வாகனத்தில் மலர்களால் அலங்கரித்து ராஜகோபுரத்தின் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட பெருமாளை மாடவீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெற்றது.

இதேபோன்று கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலர்மேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவிலில்கருட வாகனத்தில் சாமி அலங்கரித்து வைகாசி விசாக பெருவிழா நடைபெற்றது சாமி திருவீதி உலா மாடவீதிகளின் வழியாக நடைபெற்றது.

சத்தியமூர்த்தி சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழாவையொட்டி கோதண்டராமரை கருட வாகனத்தில் வைத்து அலங்கரித்து இருந்தனர். தொடர்ந்து மாடவீதி வழியாக சாமி திருவீதி உலா நடைபெற்றது.

மேலும் கொசப்பாளையம் பகுதியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழாவையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல எஸ்.வி.நகரம் பகுதியில் உள்ள பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் வைகாசி விசாக விழா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com