

நாமக்கல்,
கொல்லிமலையில் கடை ஏழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடை தன்மையையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.
எனவே வருகிற 3-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில் 8-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.