திருச்சியில் திமுக மாநாட்டுக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து-20க்கும் மேற்பட்டோர் காயம்

திருச்சியில் திமுக மாநாடு தொடங்கி களைகட்டி வருகிறது.
திருச்சியில் திமுக மாநாட்டுக்கு  சென்ற வேன் கவிழ்ந்து விபத்து-20க்கும் மேற்பட்டோர் காயம்
Published on

நாகப்பட்டினம்,

திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு இன்று(மார்ச் 9) மாலை நடைபெறுகிறது. அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் இருக்கும் திமுக தொண்டர்கள் திருச்சி நோக்கி படையெடுத்து செல்கின்றனர்.

இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தாலுகாவிலிருந்து 20க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்க வேனில் சென்றுள்ளனர்.

திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, தஞ்சாவூர் விளார் புறவழிச் சாலை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, அருகில் இருந்தவர்கள் வேனில் இருந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com