மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; மருந்தக ஊழியர் பலி

ராமநத்தம் அருகே பிறந்த நாளை கொண்டாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி மருந்தக ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; மருந்தக ஊழியர் பலி
Published on

ராமநத்தம்,

திட்டக்குடி அருகே ராமநத்தத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவருடைய மகன் ராஜதுரை (வயது 22). இவர் மங்களூரில் தங்கி தனது உறவினர் மருந்தகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ராஜதுரை நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அங்கு தனது பிறந்த நாள் விழாவை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். இதைதொடர்ந்து நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வேலைக்காக மங்களூருக்கு ராஜதுரை புறப்பட்டார். வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜதுரையின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

போலீசார் விசாரணை

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான வாகன ஓட்டி யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com