

குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அதிகவினர் போராட்டம் நடத்தினர்
இந்த போராட்டதில் அதிமுக தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்ததை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.