வேலூர், கே.வி.குப்பத்தில் பலத்த மழை-மின்னல் தாக்கி வாலிபர் பலி

வேலூர், கே.வி.குப்பத்தில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர், கே.வி.குப்பத்தில் பலத்த மழை-மின்னல் தாக்கி வாலிபர் பலி
Published on

வேலூர், கே.வி.குப்பத்தில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூரில் பலத்த மழை

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வேலூரில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு 9 மணி அளவில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னர் இடைவெளி விட்டு பலத்த மற்றும் மிதமான வேகத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 11.30 மணி வரை இந்த மழை நீடித்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். சாலையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழைக்கு பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மின்னல் தாக்கி வாலிபர் பலி

இதேபோல கே.வி.குப்பம் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது லத்தேரியை அடுத்த குக்கலப்பள்ளி கிராமம் பல்லவர் நகரை சேர்ந்த சிவா மகன் தினேஷ் (வயது 22) என்பவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வாலிபர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com