வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தம் - பயணிகள் அவதி

வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு, தனியார் பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வேலூர்,

வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு, தனியார் பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில்  காரணமாக வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இரு கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஆந்திரா, சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடைபெறுவதால் பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் - ஆந்திரா இடையே போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com