கால்நடை மருத்துவ முகாம்

குலைநேரியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
கால்நடை மருத்துவ முகாம்
Published on

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 191 சார்பில் குலையநேரி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. கால்நடை டாக்டர் மா.கீழராஜகுலராமன் தலைமை தாங்கினார். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்து மருந்து வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த பொது மருத்துவ முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.ராஜகுமார் தலைமை தாங்கினார். டாக்டர் ஏ.ஏஞ்சலின் மற்றும் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு பரிசோதனை செய்தனர். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சி.அருள் முகிலன் நன்றி கூறினார்

X

Daily Thanthi
www.dailythanthi.com