வெற்றிவேல்..! வீரவேல்..! - மத்திய இணை மந்திரி எல். முருகன் தைப்பூச வாழ்த்து

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் ‘தைப்பூசம்’ திருநாள் வாழ்த்துகளை எல். முருகன் தெரிவித்துள்ளார்.
வெற்றிவேல்..! வீரவேல்..! - மத்திய இணை மந்திரி எல். முருகன் தைப்பூச வாழ்த்து
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல் முருகன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்-முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்..”

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த முதல் குடியாம் தமிழ்க் குடியின் ஆதி கடவுளாய், நாம் அன்போடு போற்றுகின்ற அருள்மிகு முருகப் பெருமானின் உகந்த தினமான ‘தைப்பூசம்’ திருநாள் வாழ்த்துகளை, உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்ற ‘வேல் யாத்திரை’ நிகழ்வின் போது, இத்திருநாளுக்கான அரசு விடுமுறையை பெற்றுத் தந்தோம் என்பதில் பெருமிதம் அடைகிறோம். மேலும், நம் மக்கள் அனைவருக்கும், அவரவர் நினைத்த நற்காரியங்களும், சகலவிதமான மகிழ்வோடு, அப்பன் முருகப் பெருமானின் அருளும் கிடைத்திட வேண்டுமென்று மனமார வேண்டிக் கொள்கிறேன்.

வெற்றிவேல்..! வீரவேல்..!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com