அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென்மண்டல கவுன்சில் குழுவில் விஜய்க்கு முக்கிய பொறுப்பு

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா,கேரளா, தமிழ்நாடு ,தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
விஜய்
Published on

மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டுக்கான குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் விஜய் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா,கேரளா, தமிழ்நாடு ,தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

தென் மண்டல கவுன்சில் மாநாடு

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்தநிலையில், 31-வது தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு இன்று சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது.இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலா ளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள்.

என்ன ஆலோசிக்கப்படும்?

மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம் பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல் வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கி யத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அமித்ஷா வருகை

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த டைகிறார். விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கி றார்கள். பின்னர் அவர், காரில் கோவளம் செல்கிறார். இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் 5 மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com