கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

புளியங்குளம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கிராம மக்கள் நூறுநாள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், பாரபட்சம் இல்லாமல் வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com