கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு எட்டயபுரம் தாலுகா கன்னக்கட்டை கிராம மக்கள் பஞ்சாயத்து துணை தலைவர் லட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிராமப்பகுதியில் தனியார் சோலார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நீர்நிலைகளை மீட்க கோரியும், அரசு புறம்போக்க நிலத்தில் அந்நிறுவனம் மண் எடுப்பதை தடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com