விழுப்புரம்: கண்டமங்கலம் கோட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
விழுப்புரம்: கண்டமங்கலம் கோட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
Published on

விழுப்புரம்,

கண்டமங்கலம் கோட்டத்தை சார்ந்த வளவனூர் துணை மின் நிலையத்தில் உள்ள மோட்சகுளம் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், தாதம்பாளையம், சிறுவந்தாடு, உப்புமுத்தாம்பாளையம், மோட்சகுளம், பக்கமேடு, எம்.ஜி.ஆர். நகர், காந்தி நகர், கள்ளிக்குளம், புத்து, அய்யனார் கோவில் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com