

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த அய்யனார் (வயது 41), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது.
சம்பவத்தன்று மது குடித்துவிட்டு போதையில் அந்த வழியாக செல்பவர்களை திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 13 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவன் மற்றும் அவருடன் வந்த தமிழ்ச்செல்வனும்(24) தட்டிக்கேட்டனர்.
இதில் இருவருக்கும் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் செங்கல்லால் அய்யனாரின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் இறந்தார். இதையடுத்து வாலிபரையும், மாணவனையும் போலீசார் கைது செய்தனர்.