விருதுநகர்: மின்னல் தாக்கி தனியார் பள்ளி ஆசிரியர் பலி

விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் மின்னல் தாக்கி உயிரிழப்பு.
விருதுநகர்: மின்னல் தாக்கி தனியார் பள்ளி ஆசிரியர் பலி
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் ரவிசங்கர் (வயது 34). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி அனிதா இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ரவிசங்கர் தனது வீட்டின் அருகிலேயே பேன்சி ஸ்டோர் நடத்திவந்தார். இன்று மாலை வேலை விஷயமாக இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்தார்.

திருமங்கலம் அருகே எலியார்பத்தி தனியார் பாலிடெக்னிக் அருகில் சென்ற போது அப்பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது இடியும் மின்னலும் ரவிசங்கர் மீது தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

தகவலறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com