விருதுநகர்: அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு, குடிநீர்; கொரோனா நோயாளி புகார்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர் தரமின்றி இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்: அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு, குடிநீர்; கொரோனா நோயாளி புகார்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 21 படுக்கைகளில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர் தரமின்றி உள்ளது என்று நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு 3 வேளையும் வழங்கும் உணவு மற்றும் குடிநீர் தரமற்றது என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் பரவும் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com