வி.எஸ். பாபுவின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - மருத்துவமனை அறிக்கை

பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த சிறப்புக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வி.எஸ். பாபு
Published on

சென்னை,

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 9- ந்தேதி அன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தீவிர கண்காணிப்பு

பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து, தகுந்த சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.

தற்போது சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார் மற்றும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com